விவசாயிகளின் போர்க்குணமிக்க ஒற்றுமையைப் போற்றுவோம்! இந்த நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வெற்றி நாளை 27-வது நவம்பர் 2020 குறிக்கிறது. கடந்த செப்டம்பரில் இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய எதிர்ப்பு மசோதாக்களையும், மின்சாரம் (திருத்தம்) மசோதா 2020 யும் ரத்து செய்யுமாறு மத்திய அரசை ஒன்றுபட்டு வலியுறுத்துவதற்காக அவர்கள் “தில்லி செல்லுவோம் – தில்லி சலோ” என்ற எதிர்ப்பு பேரணியில் இறங்கினர். அவர்களின் விடாப்பிடியான எதிர்ப்பு மற்றும் உறுதியின் காரணமாக,
Continue reading
இந்திய ரயில்வே பயணிகளுக்கு எதிரான தனியார்மயமாக்கலை ஒன்றிணைந்து எதிர்ப்போம்!
இரயில் தொழிலாளர்களின் போராட்ட தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.ஆர்.எஸ்), நவம்பர் 2020 அன்புள்ள ரயில் பயணிகளே, நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ ரயிலில் தினசரி பயணம் செய்பவர்களாகவோ அல்லது அவ்வப்போது பயணிப்பவர்களாகவோ இருந்தாலும், இந்திய ரயில்வேயின் தனியார்மயமாக்கல் திட்டம் உங்கள் அனைவரின் நலன்களுக்கு எதிரானதாகும்! இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தத் திட்டத்தை மிகவும் மும்முரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே, அதைத் தடுப்பதற்காக நாம் அனைவரும் உடனடியாக ஒன்று சேர வேண்டும்!
Continue readingஅக்டோபர் புரட்சியின் 103 வது ஆண்டுவிழா:
பாட்டாளி வர்க்க புரட்சி, காலத்தின் கட்டாயம் 1917 நவம்பர் 7 ஆம் தேதி, ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது உலகம் முழுவதையும் உலுக்கியது. இது எல்லா நாட்டு முதலாளிகளின் இதயங்களிலும் அச்சத்தை உருவாக்கியது. புரட்சி, அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆர்வமூட்டி நம்பிக்கையை அளித்தது. இன்று, உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. போர்களும் இனப்படுகொலையும் பரவலாக நடைபெற்று வருகின்றன. எல்லா இடங்களிலும்
Continue readingநம் உரிமைகள் மீது தாக்குதலைத் தோற்கடிக்க அணி திரள்வோம்! அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!
தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறைகூவல் நவம்பர் 18, 2020 தோழர்களே, நவம்பர் 26 ம் தேதி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். இந்த பொது வேலைநிறுத்தம் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான மொத்த தாக்குதல்களுக்கும், தனியார்மயமாக்கும் திட்டத்திற்கும் எதிரானதாகும். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது, இது தொழிலாளர்கள் நாம் பல்லாண்டு கால
Continue readingநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உழவர் விரோத மசோதாக்களை கண்டனம் செய்வீர்
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை செப்டம்பர் 25, 2020 விவசாய பொருட்களின் வர்த்தகம் மற்றும் சேமிப்பு. குறித்த மூன்று மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைக் கண்டிப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகள் சாலைகளில் அணிவகுத்தும், கூட்டங்களில் பங்கேற்றும் வருகின்றனர். அவை (1) வேளாண் விளைபொருள் வணிக ஊக்கச் சட்டம் – 2020, (2) வேளாண் சேவைகள் மற்றும் விலை உறுதி ஒப்பந்தச் சட்டம், (3) இன்றியமையாப் பண்டங்கள்
Continue reading“தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்” என்ற தொடரின் இரண்டாவது கூட்டம் பெரும் வெற்றி!
தலைப்பு: இந்திய ரயில்வே தனியார்மயமாக்கப்படுவதை எதிர்ப்பீர்! செப்டம்பர் 21, 2020 திங்கட்கிழமை அன்று தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய கூட்டம் “தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்” என்ற தொடரில் இரண்டாவது கூட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (மஸ்தூர் ஏக்தா கமிட்டி) ஏற்பாடு செய்திருந்தது. கூட்டம் குறித்து இந்திய ரயில்வே தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இடையிலும், பிற பொதுத்துறை நிறுவனங்களிடையேயும் பரவலாக பரப்புரை செய்யப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து 320 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள்
Continue readingகடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் இளநிலை செவிலியர்கள் வேலைநிறுத்தம்
மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் (எம்.சி.எச்) வேலை செய்யும் இளநிலை செவிலியர்கள் ஆகஸ்டு 21-ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அவர்கள் ஊதியம் கோருகின்றனர். பி.எஸ்.சி நர்சிங் முடித்து, கேரள செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலின் கீழ் பதிவு செய்திருந்த இளநிலை செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வருட வேலையில் வைக்கப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில் நிரந்தர செவிலியர்களின் அடிப்படை
Continue readingகுறைந்த சம்பளம், வசதிகள் இல்லாமை குறித்து கர்நாடக மருத்துவப் பணியாளர்கள் ஆர்பாட்டம்
ஆகஸ்டு 13 அன்று கருநாடகம் பெலாகவியில் உள்ள மருத்துவ அறிவியல் கழகத்திலுள்ள செவிலியர்களும் மற்ற தொழிலாளர்களும் தம் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கருப்புப் பட்டைகளை அணிந்திருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் குறைந்த சம்பளத்தையும், மோசமான வேலை நிலைகளையும், சமூகப் பாதுகாப்பு பயன்கள் இல்லாததையும் எதிர்த்து அவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டுமெனவும், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டுமெனவும், நல்ல பணி நிலைமைகள் மற்றும் வசதிகளையும் அவர்கள் கோரினர்.
Continue readingதனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!
தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், செப்டம்பர் 5, 2020 சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்து நடத்திய கூட்டம். இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் பெரிய முதலாளிகள் நமது நாட்டு மக்களை திட்டமிட்ட முறையில் கொள்ளையடித்து வருவது பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் இருக்கிறது. தனியார்மயமாக்கல் என்ற இந்த அரக்கனைத் தடுத்து நிறுத்த தொழில் துறை, கட்சி, தொழிற்சங்கம் மற்றும் பிற வேறுபாடுகளைக் கடந்த
Continue readingதொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை சூலை 4, 2020 நம் நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பொறுக்க முடியாததாக ஆகிவிட்டது. வேலையின்மை, சுரண்டல் மற்றும் வறுமை ஆகியவை இதுவரை பார்த்திராத அளவை எட்டியுள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக, பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும், நாட்கூலித் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களும் கூட வேலையிலிருந்து தூக்கியெறிப்படுகின்றனர். பணியில் இருப்பவர்களில் பலருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. முடக்கப்பட்டதன்
Continue reading