ஒன்றிய வரவு-செலவு அறிக்கை 2023-24:

முதலாளிகளை கொழுக்கச் செய்ய உழைக்கும் மக்களைக் கொள்ளையடிப்பதை அதிகரிக்கும் ஒரு செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் போல, மத்திய அரசின் வரவு – செலவு அறிக்கை வெளியீடு நெருங்கி வருவதால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் பல்வேறு குழுக்கள் தங்களுக்கு மேலும் பெருநிறுவன வரி குறைப்பையும், சலுகைகளையும் அரசு அளிக்க வேண்டுமென கோரிக்கையை எழுப்பி வருகின்றன. உலகப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில், ​​இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர முதலாளிகளுக்கு

Continue reading

அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான பணி நிலைமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்

பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் (OHSW) என்பது தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குவது என்ற பெயரில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களில் ஒன்றாகும். ஆனால் அவற்றின் உண்மையான நோக்கமானது முதலாளிகள் தொழில் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்வதாகும். எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தால் இது நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 28, 2020 அன்று சட்டமாக கொண்டு வரப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும்

Continue reading

உழைக்கும் மக்களை அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்காக இந்தக் குடியரசு வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்தியக் குடியரசின் 73-வது ஆண்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை, சனவரி 18, 2023 1950 சனவரி 26 அன்று இந்தியா ஒரு சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமாக மாறியது. நாட்டின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இந்திய மக்கள் பெற்றுவிட்டனர் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. 73 ஆண்டுகளுக்குப்

Continue reading

பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் : தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையான மீறல்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய கூட்டம் பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டமானது இந்திய அரசு செப்டம்பர் 2020 இல் வெளியிட்ட நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களில் ஒன்றாகும். இந்த பிரச்சனைகள் குறித்து தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக நமது நாட்டின் தொழிலாளர்கள் தங்களின் இடைவிடாத போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலம், சில பிரிவு தொழிலாளர்களுக்கு ஓரளவு

Continue reading

மத்திய அரசே, இரப்பர் வாரியத்தை மூடாதே!

தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை இரத்து செய்! இந்தியாவில் இரப்பர் தொழிலை ஊக்குவிக்கவும், இரப்பர் பற்றிய ஆராய்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் இரப்பர் விவசாயிகளுக்கு இரப்பர் சாகுபடி தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் 1947-ஆம் ஆண்டு இரப்பர் வாரியம் உருவாக்கப்பட்டது. இரப்பர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இரப்பர் பால் வெட்டும் பயிற்சி, இரப்பர் ஷீட் தயாரிப்பு பயிற்சி, தரம் பிரித்தல் பயிற்சி, தரத்தை மேம்படுத்த நடவடிக்கை, தொழில் நுட்ப உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட 22

Continue reading

வகுப்புவாத வன்முறைக்கு எதிராகவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும் அரசியல் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்!

பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நாள் பாபரி மசூதி என்றழைக்கப்படும் 16-ஆம் நூற்றாண்டின் வரலாற்று நினைவுச்சின்னம் டிசம்பர் 6, 1992 அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றத்தை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முற்போக்கு சக்திகள் கோரி வரும் நிலையில், நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாபரி மசூதி தகர்க்கப்பட்ட அந்த இடத்தில் இராமர் கோவிலைக்

Continue reading

பண மதிப்பு நீக்கம் செய்து 6 ஆண்டுகள் முடிந்தன

அதன் உண்மையான நோக்கம் தெளிவாக அம்பலமானது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 8, 2016 அன்று, பிரதமர் நரேந்திர மோடி எல்லா 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளையும் தடை செய்யும் முடிவை வெறும் நான்கு மணி நேரம் அவசாகம் அளித்து அறிவித்தார். எண்ணியல் (டிஜிட்டல்) பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பயங்கரவாதத்துக்கு வரும் நிதியுதவியை முடக்குவதற்கும் பண மதிப்பு நீக்கம் வழி

Continue reading

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டங்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, உரங்கள் உட்பட இடுபொருட்கள் தடையின்றி கட்டுப்பாடான விலையில் கிடைக்க வேண்டும், மின்சார திருத்தச் சட்டம் இரத்து, வெள்ளத்தால் பயிர் இழப்பீட்டிற்கு உரிய நிவாரணம், விளை நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட  தங்களுடைய பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தியும், தீர்வு கோரியும் விவசாயிகள் இடைவிடாமல் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அண்மையில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள் பற்றிய

Continue reading

மின்வாரியத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!

மின்சாரத்தை தனியார்மயமாக்குவது சமுதாய நலனுக்கு எதிரானது! தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை, நவம்பர் 23, 2022 மின்சாரத் திருத்த மசோதா 2022-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் பெரும் எண்ணிக்கையில் மின்சாரத் தொழிலாளர்கள் திரண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் அங்கு வந்துள்ளனர். நாடு முழுவதும் காட்டுத் தீயென பரவிவரும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தில் மின் ஊழியர்களின் போராட்டம் ஒரு

Continue reading

தில்லியின் எல்லைகளில் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தன

தில்லியின் எல்லைகளில் பல இலட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை நவம்பர் 26 குறிக்கிறது. இந்தியாவின் தலைநகரைச் சுற்றி 2020 நவம்பர் 26 அன்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அவர்களுடைய போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுக் கூர்வதென நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் முடிவு செய்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விவசாய சங்கங்கள், ஒன்றிய அரசின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயல்படும் தத்தம் ஆளுநர் மாளிகையின் முன்

Continue reading