தொழிலாளர் ஒற்றுமை இயக்க நிருபர் அறிக்கை ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் நவம்பர் 26-இல் தொடங்கி 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற பெருந்திரள் அமர்வில் நாடெங்கிலும் தொழிலாளர்களும், விவசாயிகளும் போர்க்குணத்தோடு பங்கேற்றனர். ஆகஸ்ட் 24, 2023 அன்று புது தில்லியில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) ஏற்பாடு செய்திருந்த மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் கூட்டு மாநாட்டில், பெருந்திரள் அமர்வை ஏற்பாடு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
Continue readingCategory: English
English articles
இரயில் உற்பத்தியை தனியார்மயமாக்குவதற்கு ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலைத் (ஐசிஎஃப்) தொழிலாளர்கள் அக்டோபர் மாத இறுதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 200 வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட விரைவு இரயில் வண்டிகள் தயாரிப்பதற்காக, இரண்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய இரயில்வே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை அவர்கள் எதிர்க்கின்றனர். பாஜக உடன் இணைந்த பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) உட்பட, அனைத்துத் தொழிற்சங்கங்களும் கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில், தனியார்மயமாக்கல் ஒப்பந்தங்களை
Continue readingதொழிலாளர்கள், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான பாதை
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறைகூவல், 2023 நவம்பர், 12 தொழிலாளர்கள், விவசாயிகள் நாம் இந்தியாவின் செல்வத்தை உருவாக்குகிறோம். மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் மேல் பெரும்பான்மையாக நாம் இருக்கிறோம். இருப்பினும், தாராளமயம் – தனியார்மயமாக்கல் என்ற கொள்கையின் கீழ், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முதலாளித்துவ பெரும் கோடீஸ்வரர்களை மேலும் கொழுக்கச் செய்வதற்காக சட்டங்களையும், கொள்கைகளை இயற்றி செயல்படுத்துகின்றன. இந்திய சமுதாயம், ஒரு பேரழிவான பாதையில் இழுத்துச்
Continue readingபாலஸ்தீன மக்களுடன் கைகோர்த்து உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள்
உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு, குழந்தைகள் கொல்லப்படுதல், காசா மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டதை ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டித்துள்ளனர். பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி வந்த இந்த ஆர்பாட்டத்தினர் “பாலஸ்தீனத்துடன் நாங்கள் நிற்கிறோம்” மற்றும் “பாலஸ்தீனம் தனித்து நிற்காது” “பாலஸ்தீனத்தை விடுதலை செய்” மற்றும் பல முழக்கங்கள்
Continue readingகாசாவில் போர் நிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை மிகப் பெரும்பான்மையாக வாக்களிப்பு
அக்டோபர் 27 அன்று, காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா பொதுச் சபை அதிகளவில் வாக்களித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன் பேசிய ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி, இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது என்பது “இந்த அர்த்தமற்ற போரை, இந்த அர்த்தமற்ற கொலையை
Continue readingகுறைந்தபட்ச ஆதரவு விலையும் குளிர் சேமிப்பு வசதிகளும் இல்லாததன் விளைவு:
தக்காளி உற்பத்தியாளர்கள் தங்கள் உழைப்பின் விளைபொருட்களை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது உற்பத்தியாளர்கள் தங்கள் முதலீட்டை ஈடு கட்டுவதற்கு ஏற்ற விலையைப் பெற முடியாமல் தங்கள் விளைபொருட்களை அழிக்க வேண்டியிருப்பது ஒரு குற்றமாகும். இதைத்தான் இன்று மராட்டிய மாநிலத்தில் தக்காளி பயிரிடும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். பிம்பால்கான், நாசிக் மற்றும் லாசல்கான் மொத்த சந்தைகளில் தக்காளியின் விலை சூலையில் ஒரு கூடை (20 கிலோ) ரூ.2,000-3,200 என்பதிலிருந்து செப்டம்பரில் ரூ.90
Continue readingவிவசாயிகள் போராட்டங்கள் மீது அரசின் தாக்குதலை ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டிக்கிறது
தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை 2020-21 ஆம் ஆண்டு தில்லியின் எல்லையில் ஓராண்டு காலம் நீடித்த விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஐக்கிய விவசாயிகள் முன்னணி (ஐ.வி.மு), நியூஸ் கிளிக் என்ற ஊடக போர்டலுக்கு எதிராக அக்டோபர் 9, 2023 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், விவசாயிகளின் போராட்டங்கள் மீதான மத்திய அரசின் அவதூறான தாக்குதல்களை எதிர்த்து தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலை
Continue readingபத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்போம்
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, அக்டோபர் 6, 2023 அக்டோபர் 3 அன்று அதிகாலையில், நியூஸ்க்ளிக் என்ற இணைய தள செய்தி அலுவலகத்திலும், தில்லி தலைநகர் பகுதியிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் உள்ள கிட்டத்தட்ட ஐம்பது பெண்கள் மற்றும் ஆண்களின் வீடுகளிலும் தில்லி காவல்துறையினர் சோதனை நடத்தினர். இவ்வாறு குறிவைக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் இந்த ஊடக நிறுவனத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், கலாச்சாரப் பணியாளர்கள்
Continue readingஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்திய குழுவின் அறிக்கை, அக்டோபர் 10, 2023 இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய எதிர்ப்பு ஹமாஸ் போராளிகளுக்கு இடையே முழு அளவிலான போர் நடந்து வருகிறது. யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே இறந்துள்ளனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸின்
Continue readingமணிப்பூரில் தொடரும் நெருக்கடி
ஆகஸ்ட் 29 அன்று, மணிப்பூர் சட்டமன்றம் ஒரு நாள் கூட்டமாக கூடியது. கடந்த 4 மாதங்களாக மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் நினைவாக, சட்டமன்றம் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. அமைதிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தில் வன்முறைக்கான காரணங்கள் குறித்தும், அமைதியை எப்படி நிலைநாட்டுவது என்பது குறித்தும் எந்த விவாதமும் நடைபெறவில்லை. நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, அமர்வை 5
Continue reading