சூலை 9 அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறைகூவல், மே 9 தொழிலாளர் தோழர்களே, தொழிலாளர் அமைப்புகள் சூலை 9, 2025 அன்று அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த நடவடிக்கையின் மூலம், “தொழில் செய்வதை எளிதாக்குகிறோம்” என்ற பெயரில், நமது உரிமைகள் மீது மத்திய – மாநில அரசாங்கங்கள் நடத்தும் தாக்குதலை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பதைத் தொழிலாளர்களாகிய நாம் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். முதலாளிகளின் நலன்களுக்கு எது சிறந்ததோ

Continue reading


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நமது இரு நாட்டு மக்களின் நலன்களுக்கும் எதிரானது!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, 9 மே 2025 “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு இராணுவ தாக்குதலில், பாகிஸ்தானின் ஒன்பது இடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக இந்திய அரசு மே 7ஆம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இரு நாடுகளும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையே நடத்தப்பட்ட எல்லை தாண்டிய

Continue reading


பேரார்வத்துடன் தமிழகத்தில் மே நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன

தொழிலாளர் ஒற்றுமை இயக்க நிருபரின் அறிக்கை கடுமையான சுரண்டல் நிறைந்த வேலை மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் மீது மிகுந்த கோபத்துடனும், மனிதனை மனிதன் சுரண்டும் இந்த அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆர்வத்துடனும் உறுதியுடனும் தமிழகத் தொழிலாளர்கள் மே தினத்தைக் கடைப்பிடித்தனர். பெண் தொழிலாளர் சங்கமும், ஆடைகள் மற்றும் ஃபேஷன் தொழிலாளர் சங்கமும் இணைந்து மே தின கூட்டத்தை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Continue reading

பெகல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டிப்போம்!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, 2025 ஏப்ரல் 26 22 ஏப்ரல் 2025 அன்று காஷ்மீரின் பெகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் குறைந்தது 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிருகத்தனமான தாக்குதலைக் கண்டிப்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி நம் நாட்டு மக்களுடன் இணைந்து கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய

Continue reading

சர்வதேச உழைக்கும் வர்க்க தினம், மே தினம் வாழ்க!
முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவு கட்டும் போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறைகூவல், ஏப்ரல் 26, 2025 ஒவ்வொரு ஆண்டும், உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் மே மாத முதல் தேதியன்று அணிவகுப்புகள், பேரணிகள், நுழைவாயில் கூட்டங்கள் மற்றும் பிற வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொழிலாளர்களாக நமக்குரிய உரிமைகளை நாம் வலியுறுத்துகிறோம். அனைத்து வகையான சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்தும் நமது விடுதலைக்காகப் போராடுவதற்கான நமது உறுதியை வெளிப்படுத்துகிறோம். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கத் தொழிலாளர்கள்

Continue reading

ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் துவக்கம்
தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் முக்கிய நடவடிக்கை

தொழிலாளி வர்க்கத்தின் மீது பெரும் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலும், அரசாங்கத்தின் தொழிலாளி விரோத நடவடிக்கைகளும், அனைத்துப் பக்கத் தாக்குதல்களும் தீவிரமடைந்து வரும் சூழலில் அவற்றை எதிர் கொள்வதற்கு தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்பது இன்றைய உடனடித் தேவையாக இருக்கிறது. இதை உணர்ந்து நாடெங்கிலும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக, தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும்

Continue reading


கடுமையான சுரண்டலுக்கு எதிராக பெண் ஆடைத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ராமச்சந்திரபூரில் உள்ள எக்ஸோடஸ் ஃபியூச்சுரா நிட் பிரைவேட் லிமிடெட் என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்யும் 400 பெண் தொழிலாளர்கள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 17 வரை தொழிற்சாலை வாயில்களில் 25 நாள் எதிர்ப்பு மறியல் போராட்டத்தை நடத்தினர். கடந்த ஐந்து வருடங்களாக சட்டத்திற்கு விரோதமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய நியாயமான ஊதிய நிலுவைத்

Continue reading

மாருதி சுசூகி :
மிகவும் அநீதியான வேலை முறைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபடுகின்றனர்

2012 இல் குர்கான்-மனேசரில் உள்ள மாருதி சுசூகியின் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மாபெரும் தாக்குதலுக்குப் பிறகு நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வன்முறையைத் தூண்டி விட்டதாகவும், அதனால் ஒரு மேலாளர் இறக்க நேரிட்டதாகவும் குற்றஞ்சாட்டி, 546 நிரந்தரத் தொழிலாளர்களும், 1800 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, 147 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றமற்றவர்களென விடுவிக்கப்பட்டவர்களில் பலர் நீதிமன்ற ஆணைக்குப் பிறகும் மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை. 2024 செப்டம்பர்-அக்டோபர்

Continue reading

அனைத்திந்திய பொது வேலைநிறுத்தப் பிரகடனம்:
ஆளும் வர்க்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதத் தாக்குதலுக்கு எதிரான அனைத்திந்திய மாநாடு

தொழிலாளர் ஒற்றுமை இயக்க நிருபர் அறிக்கை தொழிலாளர்களின் அனைத்திந்திய மாநாடு 18 மார்ச் 2025 அன்று புது தில்லியில் உள்ள ஐடிஓ பியேரி லால் பவனில் நடைபெற்றது. பத்து மத்திய தொழிற்சங்கங்களும் பல்வேறு கூட்டமைப்புகளும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மாநாடு 2025 மே 20 அன்று அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தது. பாதுகாப்புத் தொழிற்சாலைகள், எஃகு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், இரயில்வே, துறைமுகங்கள், வங்கிகள்,

Continue reading

தனியார்மயத்திற்கு எதிராக அனைத்திந்திய மாநாடு:
தனியார்மயமாக்கலுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு

மின்சாரம் மற்றும் பிற துறைகளில் தனியார்மயமாக்கல் குறித்த அனைத்திந்திய மாநாடு, 15 ஏப்ரல் 2025 அன்று புது தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்றது. இது தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த மாநாட்டில் மின்சாரம், இரயில்வே, வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, நிலக்கரி, சாலைப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த 29 அமைப்புகளைச் சேர்ந்த 120 பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பிற மக்கள்

Continue reading