105 ஆண்டுகளுக்கு முன்னர், 1917 நவம்பர் 7 அன்று போல்ஷவிக் கட்சியால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட இரசியத் தொழிலாளர்கள், புரட்சியில் திரண்டெழுத்து, முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்களுடைய சொந்த அதிகாரத்தை நிறுவினர். இது முழு உலகத்தையும் உலுக்கிவிட்டது. உலகெங்கிலுமுள்ள முதலாளி வர்க்கத்தின் மனதில் இது திகிலை ஏற்படுத்தியது. எல்லா வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தைக் கட்ட முடியும் என்று அக்டோபர் புரட்சி எல்லா நாட்டுத் தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நம்பிக்கை ஒளியூட்டியது.
போல்ஷவிக் கட்சி, எப்படி இரசியத் தொழிலாளி வர்க்கத்தை வெற்றிகரமாக புரட்சிக்கு வழி நடத்திச் சென்றது என்பதை கட்சியின் எல்லா தோழர்களுக்கும் விளக்கிச் சொல்வதற்காக, அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டில் கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு ஒரு பரப்புரையை நடத்தியது. இந்த பரப்புரையின் நிறைவாக மகத்தான அக்டோபர் புரட்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
தோழர் லால் சிங்கின் அந்த முக்கிய உரையையும், அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டின் போது அக்டோபர் புரட்சி பற்றி தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வெளியிட்ட கட்டுரைகளையும் படிக்குமாறு நமது வாசகர்களை அழைக்கிறோம்.
இந்த முக்கிய கட்டுரைகளுக்கான இணைப்புகள் பின்வருமாறு –
இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங், 2017 நவம்பர் 4 அன்று ஆற்றிய முக்கிய உரை –
மகத்தான அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் நீடூழி வாழ்க!
இரசிய பிப்ரவரி புரட்சியின் அரும்பெரும் படிப்பினைகள்
இரசிய அக்டோபர் புரட்சி – 100 ஆண்டுகள்
Extracts from Lenin’s letter from afar
Invaluable Lessons of Lenin’s April Theses
The working class of Russia overthrows the rule of the bourgeoisie and establishes its own rule
Victory of October Revolution ushered in State of Workers and Peasants in Russia